திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டை பகுதியில் கரையான் பிலவு, மற்றும் ஐயாத்தை போன்ற விவசாய சம்மேளத்தின் கீழ் செய்கை பண்ணப்பட்ட சிறுபோக வேளாண்மை அறுவடைக்கு தயாரான நிலையில் கடும் காற்றினாலும் தற்போது பெய்து அடைமழை காரணமாகவும் 1200 இற்கும் மேற்பட்ட ஏக்கர் நீரில் மூழ்கிய நிலையில் கைவிடப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இப்பகுதியில் (27) மாலை 5.00 மணி தொடக்கம் (28) காலை வரை கடும் காற்றுடன் தொடர்ச்சியாக மழை பெய்து வந்தது.
இதில் கரையான் பிலவு விவசாய சம்மேளனத்தின் கீழ் 650 ஏக்கரும், ஐயாத்தை விவசாய சம்மேளனத்தின் கீழ் 450 ஏக்கரும் சிறுபோகத்திற்கான வேளாண்மை செய்கை நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது.